tamilnadu

img

சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கை வரவேற்கிறோம்: இரா. முத்தரசன்

சென்னை,அக்.9- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டி ருக்கும் அறிக்கை வருமாறு:- சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் இந்தி யப் பிரதமரைச் சந்திக்கும் நிகழ்வு, தமிழ்  நாட்டின் சிற்ப கலைத்திறனை எடுத்துக் காட்டும் எழில்மிகு மாமல்லபுரத்தில் நடை பெறவுள்ளது. தமிழ்நாட்டுக்கும், சீனத்  துக்கும் இடையிலான நட்புறவு மிகப் பழமை யானது. கடல் கடந்த வாணிபமும், பண்  பாட்டுப் பரிமாற்றமும் நெருக்கமான உறவை ஏற்படுத்தியிருந்தன. சீனயாத்திரிகரான யுவான் சுவாங் பயணக் குறிப்புகள் பண்டைய தமிழகத்தின் சிறப்புகளைப் பதிவு செய்திருக்கின்றன. வளர்ச்சியடையாத விவசாய நாடாகத் திகழ்ந்த சீனநாட்டை, மாசேதுங் தலைமை யில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சி மாற்றியமைத் தது. உலக சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட தளர்வுக்குப் பின், அமெரிக்கா உலகை தனது தனி ஆளுமைக்குள் கொண்டுவர முயற்சித்தது. சீனாவும் தனது சோஷலிச கட்டமைப்பை மாற்றிக் கொள்ளாமலேயே, சந்தைப் போட்டியில் இறங்குவதற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டது. ஆயு தங்களால் மோதிக் கொள்ளாமல் வணிக மோதலின் மூலம் மேலாதிக்கத்தை நிலை நாட்ட அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடு கள் காட் ஒப்பந்தம், உலக வர்த்தகக் கழகம்  ஆகியவற்றை உலக நாடுகள் மீது திணித்தன.

மற்ற நாடுகளுக்காக விரித்த வலையில் அமெரிக்காவே சிக்கிக் கொண்டுள்ளது. வணிகப் போரில் தான் தொலைந்துவிடாமல் தப்பித்துக் கொள்ள உலக வர்த்தகக் கழ கத்திலிருந்தே வெளியேறி, தன்னைப் பாது காத்துக் கொள்வது குறித்து இன்று அமெ ரிக்கா ஆலோசனை செய்கிறது. ஆதிக் கத்தை தகர்த்து அச்சநிலைக்கு அதை ஆட்ப டுத்திய பெருமை சீனாவையே சாரும். அது  தனது அளப்பறிய ஆற்றலால் ஏராளமான பண்டங்களை உற்பத்தி செய்து, அமெ ரிக்கச் சந்தையில் குவித்தது. உலகமே பொருளாதார நெருக்கடிக்குள் ஆழ்ந்து கிடக்கும் நிலையில், ஒரு புதிய பொருளாதார முறைமையை உருவாக்கும் சூழலை இந்தியாவும், சீனாவும் சேர்ந்து ஏற்ப டுத்த முடியும். இந்தியாவை விட அதிக மக்கள்  தொகைக் கொண்ட சீனம், தனது மக்க ளுக்கு வேலையின்மை, பட்டினி, பசி, கடன்  கள் இல்லாத வாழ்க்கையை அளித்திருக்கி றது. அதனிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்  வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்தியரும், சீனரும் சகோதரர்கள் என்ற முழக்கம் இருநாடுகளுக் கும் புதிதல்ல. சீனா  நமக்கு நெருக்கடி கொடுக்கும் என அச்சு றுத்தியே மேலைநாடுகள் பக்கம் நெருக்கம் ஏற்படுத்தப்பட்டது. அதனால் இன்று நமது  நாடு பாதிப்புக்குத்தான் உள்ளாகி இருக்கி றது. இந்தியா தனது நட்புறவு நாடு, இரு நாட்டு நலன்களும் ஒருசேரப் பாதுகாக் கப்படும் என்ற உறுதியை சீனா வழங்க வேண்  டும். இந்த இருநாடுகளின் கூட்டுறவில் ஒரு  புதிய உலக முறைமை உருவெடுக்க வேண்  டும். பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாட்டுக்கு வருகை தரும் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகி யோரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நெஞ்சார வர வேற்கிறது.  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி வித்திருக்கிறார்.

;